மங்களூரு,
அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கர்நாடக மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் செபஸ்தியான் (வயது 41), ஜெகதாஸ் (30), சிஜன் (25), புஷ்பராஜ் (46), அருள்ராஜ் (25) ஆகிய 5 பேரும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மீனவர் ததேயுஸ் (50) என மொத்தம் 6 பேர் கடந்த 14-ந் தேதி தேங்காப்பட்டணத்தில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் கர்நாடக மாநில கடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.