மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 4 பேர் அனுமதி

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 4 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

கோவில்பட்டி,

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 4 பேர் அனுமதி

இந்த நிலையில் கோவில்பட்டி மில் தெருவைச் சேர்ந்த 24 வயதான வாலிபரும், முகமதுசாலிஹாபுரத்தைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவரும், மேலப்பட்டியைச் சேர்ந்த 63 வயதான முதியவரும், கயத்தாறைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டியும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்து, ஆய்வக பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதன்மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது