மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய லாரி மீண்டும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வெள்ளகோவில் அருகே விபத்தில் சிக்கிய லாரி மீண்டும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வி.மேட்டுப்பாளையம்,

வெள்ளகோவில் அருகே நேற்று முன்தினம் காலை காரும், பஞ்சு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியானார்கள். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தின் போது காரின் டீசல் டேங்க் வெடித்து, டீசல் சிதறியதில் பஞ்சு லாரி தீப்பிடித்து எரிந்தது. உடனே வெள்ளகோவில் தீயணைப்பு படை வீரர்களும் போலீசாரும் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதன்பின்னர் லாரியையும், காரையும் சாலையின் ஓரமாக தள்ளி விட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் அந்த பஞ்சு லாரி நேற்று மீண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. லாரியில் பிடித்த தீயை முழுமையாக அணைக்காததால் மீண்டும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு