மாவட்ட செய்திகள்

53 டாக்டர்களுக்கு மராட்டிய மருத்துவ கவுன்சில் சம்மன்

போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக 53 டாக்டர்களுக்கு மராட்டிய மருத்துவ கவுன்சில் சம்மன் அனுப்பி உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை சி.பி.சி. மருத்துவ கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு பட்டயப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு நிறைவு செய்த சிலர் போலியான தேர்ச்சி சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 20 டாக்டர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக போய்வாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மராட்டிய மருத்துவ கவுன்சில் இது தொடர்பாக விசாரணை நடத்த 53 டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இது குறித்து மராட்டிய மருத்துவ கவுன்சில் தலைவர் சிவகுமார் உத்துரே கூறியதாவது:- சி.பி.சி. மருத்துவ கல்லூரி சர்ச்சை குறித்து ஆழமான விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி 53 டாக்டர்களின் மதிப்பெண்களை அவர்களது தேர்வு சான்றிதழ்களில் உள்ள மதிப்பெண்களோடு ஒப்பிட்டு பார்க்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு