மாவட்ட செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நொச்சிக்குட்டையில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்தவர் புஞ்சைபுளியம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்த பொன்னுசாமி (வயது 50) என்பதும், தொழிலாளியான இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், அவருக்கு செல்வி (39) என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகனும் பவித்ரா என்ற மகளும் உள்ளது தெரியவந்தது.

பொன்னுசாமி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு