மாவட்ட செய்திகள்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவையொட்டி நெல்லையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

நெல்லை,

குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.

அப்போது போலீஸ், ஊர்க்காவல் படை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

அணிவகுப்பு ஒத்திகை

இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மாநகரம் மற்றும் மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், தேசிய மாணவர் படையினர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவது மற்றும் அணிவகுப்பு நடத்துவது போன்று ஒத்திகை செய்தனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்