மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் கைது

திண்டுக்கல் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் :

திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 19). மெக்கானிக். இவர் திண்டுக்கல்லில் ஒரு ஒர்க்சாப்பில் வேலை செய்கிறார்.

இந்த நிலையில் 18 வயது நிரம்பாத ஒரு சிறுமியுடன், சரவணக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதையடுத்து சிறுமியின் தரப்பில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்