மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

நண்பர்களுடன் கிளாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துகொண்டிருக்கும் போது திடீரென கிணற்றில் மூழ்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). மெக்கானிக். இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சென்றார். பின்னர் தனது நண்பர்களுடன் கிளாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துகொண்டிருக்கும் போது திடீரென கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது