மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: லாரிகளில் தண்ணீர் திருடப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு

லாரிகளில் தண்ணீர் திருடப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

அதன்படி திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக் கன்பட்டி, கள்ளிப்பட்டி, ஆலக்குவார்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் சுமார் 80 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி, சிலரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர்.

இதையடுத்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமங்களில் அமைந்துள்ள 13 கிணறுகளில் இருந்து சிலர் லாரிகள் மூலம் தண்ணீரை திருடி விற்பனை செய்கின்றனர். இரவு, பகலாக லாரிகளில் தண்ணீர் திருடும் சம்பவம் நடந்து வருகிறது. ஆனால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை.

முறையாக குடிநீர் வினியோகிக்கக்கோரியும், தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் லாரிகளில் தண்ணீர் திருடுவதை தடுத்து, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்