மாவட்ட செய்திகள்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி - அமைச்சர் தொடங்கி வைத்தார்

வெளிநாட்டில் இருந்து வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் இருப்பதை கண்காணிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட செயலியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ராஜகோபால், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு, வெளிநாட்டிலிருந்து வந்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்கள், வெளியே செல்லாமல் இருப்பதை கண்காணிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புதிதாக உருவாக்கிய செயலியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:-

தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அரசு நடவடிக்கைகளுக்கு வணிகர்களும் ஒத்துழைப்பு தந்தால்தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். வணிகர்கள் சரக்குகளை கடைகளில் வாங்கி வாகனங்களில் ஏற்றி கொண்டு வர துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்று கொண்டு வரலாம்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், இறைச்சி, மீன், மளிகை பொருட்கள், மருந்தகங்கள், ஓட்டல்களில் பார்சல் உணவு, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்க கடைகள் வழக்கம்போல் செயல்பட தடை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரி லதா, மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மங்களேஸ்வரன், முரளிதரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாகர், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, மருத்துவ கல்லூரி மருத்துவ அலுவலர் மீனா, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா மற்றும் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு