பட்டுக்கோட்டை,
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். வக்கீல் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் வரவேற்றார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆனதில் இருந்து மோடியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வாக்குள்ள ஆட்சி இல்லை.