மாவட்ட செய்திகள்

எழும்பூரில் நடந்து சென்றவரிடம் பணம்-செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது

எழும்பூரில் நடந்து சென்றவரிடம் பணம்-செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 43). இவர் எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் திடீரென அவரது சட்டை பையில் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் புதுப்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த சாமுவேல் (26), இருதயராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு