மாவட்ட செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது குடித்த டெய்லர் சாவு

திருவள்ளூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டை சேர்ந்தவர் நசீர் (வயது 40). இவருக்கு சுல்தானா (35) என்ற மனைவியும், ரிஹான்(5) என்ற மகனும் உள்ளனர். நசீர் ஈக்காட்டில் டெய்லராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ளவர்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதியன்று நசீர் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நசீர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து புல்லரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்