படப்பை,
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் குகன் (வயது 30). சென்னை ஜமீன் பல்லாவரம் நடேசன் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (வயது 34). என்ஜினீயர்கள். இவர்கள் இருவரும் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று படப்பையை அடுத்த பூந்தண்டலத்தில் அமைந்துள்ள வீட்டு மனை பிரிவுகளை பார்த்துவிட்டு மேலாத்தூர் வழியாக தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். எருமையூர் தர்காஸ் அருகே உள்ள கல்குவாரியில் இருந்து வந்த லாரி சாலையில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.