மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தினத்தந்தி

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டு குருவாயூரப்பன்நகர், எஸ்.ஆர்.வி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அடிப்படை வசதி செய்துதர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் சிகாமணி தலைமையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய செயலாளர் பானுமதி மற்றும் சங்க உறுப்பினர், ஊர் பொதுமக்கள் நேற்று காலை போயம்பாளையத்தில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் குடிநீர், சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உதவி கமிஷனர் செல்வநாயகத்திடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட உதவி கமிஷனர் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பாதாள சாக்கடை கால்வாய் பணி நடைபெறுவதால் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை உள்ளிட்ட பணிகள் தாமதமாகும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை