மாவட்ட செய்திகள்

ரேணிகுண்டா அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப சாவு

வெளிநாட்டில் இருந்து திரும்பியவரை வரவேற்று அழைத்து வந்த காரும், சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

ஸ்ரீகாளஹஸ்தி,

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிந்தகொம்மதின்னா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரம் (வயது 36). குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய கங்காதரத்தை அவருடைய குடும்பத்தினர் வரவேற்க சென்றிருந்தனர். பின்னர் அவருடன் காரில் தங்கள் கிராமத்துக்கு புறப்பட்டனர்.

அவர்களது கார் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் மாமண்டூர் அருகே நேற்று முன்தினம் இரவு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே கடப்பாவில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரியும், இவர்கள் சென்ற காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. அதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் படுகாயத்துடன் துடித்தனர். விபத்தால், அங்கு கடும் போக்குவரத்துப்பாதிப்பு ஏற்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு