மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே, டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்று பொதுமக்கள் தர்ணா போராட்டம்

செங்கம் அருகே பனைஓலைப்பாடியில் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்று பொதுமக்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

செங்கம் தாலுகா பனை ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், செங்கம் தாலுகா பனைஓலைப்பாடி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. சில சமூக விரோதிகள் வேண்டுமென்றே சிலரை தூண்டிவிட்டு டாஸ்மாக் கடைக்கும், அரசுக்கும் அவப்பெயரை உண்டாக்க வேண்டுமென்ற தீய உள்நோக்கத் தோடு பொய்யான தகவலை கூறி டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் தடுத்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடையை மூடாமல் அதே இடத்தில் செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் இந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஒப்பாரி வைத்து பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர் நேற்று கடையை மூடாமல் அதே இடத்தில் செயல்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு