மாவட்ட செய்திகள்

சேலம்:வழிப்பறி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

சேலம் வழிப்பறி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

சேலம்,

ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் செல்வம் (வயது 25). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வழிப்பறி வழக்கில் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் செல்வத்தை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவர் அதன் பிறகு தலைமறைவானார். இந்த நிலையில் செல்வத்தை கைது செய்து ஆஜர்படுத்த சேலம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்வத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது