மாவட்ட செய்திகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு; தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிட தமிழர் கட்சியினர் கைது

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் தடையை மீறி திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பு ஏற்ற உடன், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று அவர் முதலாவது அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவருடைய டெல்லி வருகைக்கு ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகே நேற்று திராவிட தமிழர் கட்சியினர் தடையை மீறி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுச்செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அங்கு அனுமதி இல்லாமல் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த கட்சியினர் 11 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு