மாவட்ட செய்திகள்

துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தலையொட்டி கொடைக்கானலில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.

தினத்தந்தி

கொடைக்கானல்:

வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் நடத்திய கொடி அணிவகுப்பு ஊர்வலம் கொடைக்கானலில் நடந்தது.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பை, கூடுத ல் போலீஸ் சூப்பிரண்டு இனிகோ திவ்யன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கொடைக்கானல் ஏரிச்சாலை, 7 ரோடு சந்திப்பு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளியை ஊர்வலம் வந்தடைந்தது.

பின்னர் அங்கு துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு