மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியிடம் நகை-பணம் பறித்ததாக பெற்றோர் புகார்; வாலிபரிடம் போலீசார் விசாரணை

காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியிடம் நகை-பணம் பறித்ததாக பெற்றோர் கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

தினத்தந்தி

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் அகிலா 17 வயதுடைய பெண்ணின் பெற்றோர், கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில், தங்களது மகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க சங்கிலி ஒன்றை வாலிபர் ஒருவர் பறித்து விட்டார் என்றும், அறியாத வயதில் தங்களது மகளிடம் மோசடியில் ஈடுபட்ட அந்த வாலிபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி குறிப்பிட்ட வாலிபரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு