மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பதற்றமின்றி அமைதியாகவும், வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பெயரில் நடைப்பெற்றது. இந்த அணிவகுப்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தொடங்கி வைத்தார்.

இந்த அணிவகுப்பு ஆயில் மில், நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், தேரடி வீதி, பஜார், குளக்கரை வீதி வழியாக காமராஜர் சிலை அருகே நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு