மாவட்ட செய்திகள்

சிவகிரியில் உள்ள தீரன் சின்னமலை உருவ சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

சிவகிரியில் உள்ள தீரன் சின்னமலை உருவ சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினத்தந்தி

சிவகிரி,

சிவகிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவ சிலை உள்ளது. தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அங்கு கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு