மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ரூ.8 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணி சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆய்வு

காஞ்சீபுரம் அருகே மாகரல்-வெங்கச்சேரி இடையே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடந்தது. அப்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் 7 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அதையொட்டி காஞ்சீபுரம் அருகே மாகரல்-வெங்கச்சேரி இடையே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. ரூ.8 கோடி செலவில் கட்டப்படும் இந்த தடுப்பணையை சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் முருகு சுப்பிரமணியம், காஞ்சீபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்தையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பணியை விரைவாக முடிக்கும்படி தலைமை என்ஜினீயர் முருகு சுப்பிரமணியம் அறிவுரை வழங்கினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை