ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம் முன் தேங்கி நிற்கும் கழிவுநீர்
சென்னை பெரம்பூர் மடுமா நகர் கபிலன் தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நூலகம் இயங்கி வருகிறது.
பெரம்பூர்,
எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இந்த நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் கர்ப்பிணிகள், நோயாளிகள் என 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.