மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கரிக்கான்குளத்தை யொட்டிய பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழை பெய்தால் அந்த குளத்தில் இருந்து மழைநீர் வெளியே செல்வதற்கான வழியில்லை. ஆகவே மழைநீர் செல்வதற்கான வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வருவாய்துறையினரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.