மாவட்ட செய்திகள்

ஏரியில் குடிமராமத்து பணிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்

கச்சிராயப்பாளையம் அருகே ஏரியில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்

தினத்தந்தி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி தூர்ந்து போனதோடு, மதகுகளும் சேதமடைந்தது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை