மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் ரூ.1 கோடியில் பாலாறு குடிநீர் திட்டம்

செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கி வருகின்றனர் இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் புகாரை ஏற்று பழவேலி பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. அரசு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில் நடந்த இந்த பூமிபூஜையில் சிறப்பு அழைப்பாளராக செல்வம் எம்.பி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் தி.மு.க. நகர செயலாளர் நரேந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் அன்புச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டப்பணி நடந்து முடிந்தால் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு