மாவட்ட செய்திகள்

போலீஸ் வாகனங்களில் சுழல் விளக்குகள் பொருத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு

போலீஸ் வாகனங்களில் சுழல் விளக்குகள் பொருத்த ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மத்திய அரசு வி.ஐ.பி. கலாசாரத்தை ஒழிக்கும் வகையில் கடந்த ஆண்டு அரசு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு உள்பட அரசு துறையினர் தங்கள் கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த தடை விதித்தது. மராட்டியத்தில் இந்த உத்தரவு கடந்த ஆண்டு அக்டோபரில் அமலுக்கு வந்தது.

எனினும் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர், வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், போலீசார் நீலம் அல்லது சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய 3 வண்ணங்கள் சேர்ந்த சுழல் விளக்குகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநில உள்துறை போலீஸ் வாகனங்களில் புதிய வண்ணங்களில் சுழல் விளக்குகளை பொருத்த ரூ.10 கோடி ஒதுக்கி உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் போலீசார் பயன்படுத்தும் வாகனங்களில் விரைவில் புதிய சுழல் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை