மாவட்ட செய்திகள்

பாபநாசத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.28 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.28 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

பாபநாசம்,

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கருகாவூர் மெயின்ரோட்டில் நேற்று இரவு 8.30 மணியளவில் பறக்கும் படை அதிகாரி ஜானகிராமன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன், தலைமை ஏட்டு சம்பத்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஏ.டி.எம். பணம் நிரப்பும் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.28 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாபநாசம் தாசில்தார் கண்ணனிடம் ஒப்படைத்தனர். அப்போது அவருடன் துணைதாசில்தார்கள் தர்மராஜ், செல்வராஜ், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்