மாவட்ட செய்திகள்

கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை; டாக்டர் கைது

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்தையே டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதனால் இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

இதை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருகிறார்கள். அதேபோல் செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பவரை குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அதிபதி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர், கைதான தினேசிடம் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு