மாவட்ட செய்திகள்

செம்மண் அள்ளி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஆண்டிப்பட்டி அருகே செம்மண் அள்ளி வந்த 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே பாலக்கோம்பை கென்னடி நகர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் ராஜதானி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதி வழியாக செம்மண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும், டிராக்டர்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பியோடினர்.

உடனே போலீசார், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், டிராக்டர்களை ஓட்டி வந்த டிரைவர்கள் பாலக்கோம்பையை சேர்ந்த வெங்கடேசன், குருநாதன் என்றும், அவர்கள் அனுமதியின்றி செம்மண்ணை டிராக்டர்கள் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்