மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது

கூடலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கூடலூர்

கூடலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவிக்கு பாலியல் தொல்லை

கூடலூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் டியூசன் படித்து வருகிறார். டியூசனுக்கு சென்ற இடத்தில் புளியம்பாராவை சேர்ந்த கலைவாணன் (வயது 35) என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவி பந்தலூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அதை அறிந்து கொண்ட கலைவாணன், பந்தலூர் சென்று அந்த மாணவியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

போக்சோவில் கைது

இதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கலைவாணனை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்