மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

செந்துறை,

திறன் வளர்ப்பு பயிற்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி சாமிதுரை தலைமை தாங்கினார். அணி உறுப்பினர் செல்வம் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதேவி, சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சியில் செந்துறை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சி மன்ற தலைவர்களும், ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழக்கறிஞர் பாஸ்கர் இளம் வயதில் பெண்கள் திருமணம் செய்தலை தடுப்பது குறித்தும், பாலியல் ரீதியாக பெண் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதைஎவ்வாறு தடுப்பது மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார். முடிவில் அணி உறுப்பினர் பரமசிவம் நன்றி கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு