மாவட்ட செய்திகள்

காற்றுக்காக குடும்பத்துடன் மாடியில் தூங்கியபோது வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டு

காற்றுக்காக குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கியபோது நள்ளிரவில் வீடு புகுந்த மர்மநபர்கள் 13 பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர்.

செங்குன்றம்,

சென்னை மாதவரம் பால்பண்ணை 3-வது தெருவை சேர்ந்தவர் முகுந்த ராமானுஜம் (வயது 46). அதே பகுதியில் மணல், செங்கல், ஜல்லி வினியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால் கதவை சும்மா சாத்திவிட்டு குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நள்ளிரவில் அவரது வீட்டின் கதவை திறந்து நைசாக உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.1,300 ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்