மாவட்ட செய்திகள்

நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு மீனவ கிராமத்தினர் மனு கொடுக்க திரண்டு வந்ததால் பரபரப்பு

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி மீனவ கிராம மக்கள் நாகை கலெக்டர் அலுவலத்துக்கு திரண்டு வந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பழையாறு முதல் செருதூர் வரை உள்ள 54 கிராமத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வந்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அனுமதி

பின்னர் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்காமல், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி பெற்று தர வேண்டும் என தெரிவித்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு மீனவ கிரமத்தினர் ஒன்று திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு