மாவட்ட செய்திகள்

மதுக்கடைகள் 4 நாட்கள் மூடல்

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களில் மதுக்கடைகள் 4 நாட்கள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் வருகிற 9-ந்தேதி நடக்கிறது. எனவே, தேர்தல் நடக்கும் பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) முதல் 9-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்பட வேண்டும்.

அதுபோல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளான வருகிற 12-ந்தேதியும் இந்த பகுதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடை மூடப்பட்ட பகுதிகளில் மதுவிற்பனை எதுவும் நடக்கக்கூடாது. அதையும் மீறி யாரேனும் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு