மாவட்ட செய்திகள்

கொரானா விதிகளை பின்பற்றாத ஜவுளிக்கடைக்கு ரூ.5,000 அபராதம்

தக்கோலத்தில் கெரோனா விதிகளை பின்பற்றாத ஜவுளிக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

அரக்கோணம்

தக்கோலத்தில் கெரோனா விதிகளை பின்பற்றாத ஜவுளிக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள், சிறு வணிக கடைகளில் யாரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

செயல் அலுவலர் கணேசன் தலைமையில் ஊழியர்கள் இன்று தக்கோலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், சிறுவணிக கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் கொரேனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சமூக விலகலை பின்பற்றாமலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும் செயல்பட்ட ஒரு ஜவுளிக்கடைக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ரூ.5000 அபராதம் விதித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு