மாவட்ட செய்திகள்

பரனூர் சுங்கச்சாவடியில் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

பரனூர் சுங்கச்சாவடியில் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம் (வயது 44). இவர் தனது காரில் நண்பர்கள் 2 பேருடன் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த ராமசுப்பிரமணியம் காரை நிறுத்தினார். அனைவரும் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கினர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கார் நடுரோட்டில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு