மாவட்ட செய்திகள்

பெருங்குடி குப்பை கிடங்கில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் பாராட்டு

பெருங்குடி குப்பை கிடங்கில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சால்வை அணிவித்து பாராட்டினார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த 27-ந் தேதி மாலை திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியது. சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலமாக கிளறி அதில் தண்ணீர் பாய்ச்சியும், குப்பைகள் மீது மணலை கொட்டியும் குப்பைகள் மீது கொட்டியும் சுமார் 15 ஏக்கர் பகுதிகளில் புகைந்து வந்த நெருப்பை முழுமையாக கட்டுப்படுத்தினர்.

இந்தநிலையில் குப்பை கிடங்கில் எரிந்த தீயை முழுமையாக அணைக்க இரவு-பகல் பாராமல் பணியாற்றிய மாநகராட்சி தலைமை என்ஜினீயர் என்.மகேஷன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகள், ஊழியர்கள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி சால்வை அணிவித்து பாராட்டினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை