மாவட்ட செய்திகள்

ஏரியூரில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் உள்பட 4 பேர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் சின்னப்பநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 30). சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

ஏரியூர்,

இவர் நேற்று மாலை மொபட்டில் கடைவீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் காமராஜ்பேட்டையைச் சேர்ந்த மாயக்கண்ணன் (37) என்பவர் வந்தார். திடீரென மொபட்டும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கிருஷ்ணனும், மாயக்கண்ணனும் படுகாயம் அடைந்தனர். அப்போது மாயக்கண்ணனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பூசாரி நந்தகுமார் (43) என்பவர் மாயக்கண்ணனின் மோட்டார்சைக்கிளில் மோதினார். இதில் நந்தகுமார் மற்றும் அந்த வழியாக நடந்து சென்ற கலா (30) ஆகியோரும் காயம் அடைந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு