புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனா முகமது புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியிடம் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சி 18-வது வார்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள (மினி போர்) பழுதை நீக்ககோரி ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணேஷ் நகர் பகுதி மற்றும் மரக்கடை வடக்கு சந்து ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் கடந்த 3 மாதங்களாக குடி நீருக்காக மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைத்து தரவேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகத்தால் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கும் இந்த நேரத்தில் ஒரு வார்டில் 4 ஆழ்துளை கிணறு செயல்படாததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகளை நிர்வாகம் புரிந்து கொண்டு தண்ணீர் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.