மாவட்ட செய்திகள்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன விழா

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சாமி கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

தினத்தந்தி

அதன்படி நேற்று மாலை விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணியளவில், ரத்தின சபாபதி பெருமான் பழை ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் விபூதி அபிஷேகத்துடன் எழுந்தருளினார்.

பின்னர், நடராஜருக்கு, 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை வரை நடத்தப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களை அமர்ந்து தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பக்தர்கள் வரிசையில் நின்று சாமியை தரிசித்துவிட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் ஆகியோர் செய்திருந்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை