மாவட்ட செய்திகள்

திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூரில் அஞ்சனாட்சி அம்மாள் சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கான பிரம்மோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. மணிகண்டீஸ்வரர், அஞ்சனாட்சி அம்மாள் ஆகியோர் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் 1செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்