திருவள்ளூரில் மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாத பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் விழா நேற்று காலை 5.50 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சாமி வெளி புறப்பாடு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு கருட சேவையும், 2-ந்தேதி திருத்தேர் திருவிழாவும், 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சாமிக்கு திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
பிரமோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கவுரவ ஏஜெண்டு சம்பத் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.