மும்பை,
பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் இந்தியாவில் இருந்து வகுப்புவாதத்தை அகற்ற வேண்டும். தொடர்ந்து போராடுவதன் மூலம் நாம் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை எதிர்கொள்ள படித்த இளைஞர்களுக்கு கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.