மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு “மொபைல் ஆப்“ மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான வழிமுறைகள் கடைப்பிடிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான வழிமுறைகள் கடைப்பிடிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் தேசிய வாக்காளர் சேவை இணைய தளம் மூலம் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும், எதிர்கால வாக்காளர்கள் விவரங்கள் பதிவு செய்வது குறித்தும் மேலும் வாக்காளர் பட்டியலுக்கு தேவையான சான்றுகள் விவரங்கள் குறித்தும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இருந்து 179 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு