பெங்களூரு,
அப்போது அந்த வீட்டில் போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பெய்த் சாக்ஸ் (வயது 34), கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கன்டி ஹென்ட்ரி (24) மற்றும் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த பிரதீக் ஷெட்டி (29) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிரதீக் ஷெட்டி கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார்.