பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி 
மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

தினத்தந்தி

கணபதி

கோவை கணபதியை அடுத்துள்ள சங்கனூர் ரோட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது42). பழைய இரும்பு வியாபாரி. இவர் தனது மனைவியுடன் ரத்தினபுரி ஜீவானந்தம் ரோடு 7-வது வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், அமர்ந்திருந்த செந்தில்குமாரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகையினை பறிக்க முயன்றனர். நகைகளை அந்த பெண் கெட்டியாக விடாமல் பிடித்துக் கொண்டதால் அந்த நபர்களால் நகையினை பறிக்க முடியவில்லை.

உடனடியாக முயற்சியினை கைவிட்டு தங்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.

உடனடியாக இதுகுறித்து ரத்தினபுரி போலீசாரிடம் செந்தில்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்