மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி சென்னை வாலிபர் பலி

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகரை சேர்ந்த வாலிபர் வாகனம் மோதி பலியானார்.

தாம்பரம்,

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் சுடலை என்கிற சுரேந்திரன் (வயது 20). இவர் சென்னையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரு நோக்கி சென்றார்.

காஞ்சீபுரம் அடுத்த வெள்ளைகேட் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு சென்றது.

உடனடியாக சுரேந்திரனை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்கைகாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு